Wednesday, February 29, 2012

ஏற்றத்துடன் முடிந்தது வர்த்தகம்



 இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 21.56 புள்ளிகள் அதிகரித்து 17752.68 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 9.70 புள்ளிகள் அதிகரித்து 5385.20 புள்ளிகளோடு காணப் பட்டது. ரிலையன்ஸ் இண்டர்டீஸ், பார்தி ஏர்டெல், எஸ்பிஐ, டாடா ஸ்டீல், விப்ரோ, டாடா பவர், ஸ்டெர்லைஸ் இண்டர்டீஸ் ஆகியவற்றின் பங்குகள் ஏற்றத்தில் முடிந்தன.

ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம்



 இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. சர்வதேச சந்தையில் ஏற்றப்பட்ட ஏற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தையில் ஏற்றம் துவங்கியுள்ளது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 268.95 புள்ளிகள் அதிகரித்து 18000.07 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 81.25 புள்ளிகள் அதிகரித்து 5456.75 புள்ளிகளோடு காணப் பட்டது. இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மீண்டும் 18000 புள்ளிகளை எட்டியுள்ளது. இது பங்கு முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 16 காசுகள் உயர்ந்து 48.91 ஆக இருந்தது.

உலக சந்தையில் எண்ணெய்யின் விலை பாரியளவில் அதிகரிப்பு



உலக சந்தையில் எண்ணெய்யின் விலை கடந்த ஜுலை மாதத்தின் பின்னர் பாரியளவில் அதிகரித்துள்ளதாக பொருளாதாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ஈரானின் அணுத்திட்ட சர்ச்சைகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

உலகின் ஐந்தாவது எண்ணெய் உற்பத்தி நாடாக ஈரான் விளங்குகின்றது.

இந்த நிலையில் ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை சில நாடுகள் நிறுத்தியுள்ளதுடன், பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தப்போவதாகவும் ஈரான் தெரிவித்திருந்தது
.

"சென்செக்ஸ்' 285 புள்ளிகள் உயர்வு"



மும்பை நாட்டின் பங்கு வியாபாரம், செவ்வாய்க்கிழமையன்று நன்கு இருந்தது. திங்கள்கிழமையன்று வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில், 2.5 சதவீதம் சரிவைக் கண்டது. இந் நிலையில், நேற்றைய வர்த்தகம் 1.6 சதவீத அள விற்கு ஏற்றம் கண்டது.
சர்வதேச நிலவரங்களுக்கிடையிலும், சில்லரை முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குச் சந்தைகளில் முதலீடு மேற்கொண்டதையடுத்து, நேற்றைய வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. கச்சா எண்ணெய் விலை குறைந்ததை யடுத்து, இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் முன்னேற்றம் கண்டது. 
இது தவிர, நிதி நெருக்கடிக்குத் தீர்வுகாணும் வகையில், இரண்டாவது திட்டத்திற்கு, கிரீஸ் பார்லிமென்ட் ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. இதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில்,வங்கி, ரியல் எஸ்டேட், பொறியியல், உலோகம், மின்சாரம், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், 3 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்திருந்தது. 
இருப்பினும், தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த, டி.சி.எஸ்., விப்ரோ, மற்றும் மருந்து துறையைச் சேர்ந்த சன் பார்மா உள்ளிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண்,வர்த்தகம் முடியும் போது,285.37 புள்ளிகள் அதிகரித்து,17,731.12 புள்ளி களில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17, 776.82 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,530.44 புள்ளிகள் வரையிலும் சென்றது. 
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 24 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 6 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 94.30 புள்ளிகள் உயர்ந்து, 5,375.50 புள்ளிகளில் நிலைபெற்றது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,391.10 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,306.45 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Tuesday, February 28, 2012

நிபந்தனைகளின் அடிப்படையில் இலங்கைக்கான கடன் அங்கீகாரம்




இலங்கை மின்சாரசபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் என்பன நட்டமடையாத நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இலங்கைக்கான கடனை அங்கீகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவிக்கின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி கொஷி மாதாய், பிஸ் பெஸ்டிற்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே இதனைக் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெற்றுக் கொள்வதற்காக செய்துகொண்ட உடன்படிக்கைகள் காரணமாகவே இலங்கையில் வட்டி வீதமும் நாணயமாற்று வீதமும் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சுமத்துகின்றன.

அதன் காரணமாகவே எரிபொருட்களின் விலையும் மின் கட்டணமும் அதிகரிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் அரசாங்கம் மீது குற்றம்சுமத்திவருகின்றன.

இந்த விடயம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி ஹொசியிடம் வினவினோம்.

அரசாங்கத்துடன் செய்துகொண்டுள்ள கடன்சார் செயற்திட்டங்களின் பிரகாரம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தையும், மின்சாரசபையையும் நட்டமடையாத நிறுவனங்களாக மாற்ற வேண்டும் என்பது அதன் நிபந்தனைகளுல் ஒன்றாகும் என அவர் குறிப்பிட்டார்.

இதனை செயற்படுத்துகையில் பாரியளவில் எரிபொருட்களின் விலை அதிகரித்தால், சந்தை நிலவரத்திற்கமைய அதனை முகாமைத்துவம் செய்வதற்கான திட்டமொன்று இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அரசாங்கத்தினால் அந்த செலவுகளை தாங்கிக் கொள்ள முடியாது என்பதுடன் மறுபுறத்தில் இவ்வாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் செயற்படுமாயின், அரசாங்கம் பாரிய நட்டத்தை எதிர்நோக்க நேரிடும் என்று கொஷி மாதாய் தெரிவித்தார்.

அந்த நிதியை திரட்டிக் கொள்வதற்கு மேலும் பணம் அச்சிட வேண்டியேற்படும் என்றும் இதன்போது பணவீக்கம் அதிகரிக்கும் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி குறிப்பிட்டார்.

கடன்பெற முயற்சிக்கும் பட்சத்தில் வட்டி வீதம் அதிகரிக்கலாம் எனக் குறிப்பிட்ட கொஷி மாதாய், அரசாங்கத்திற்கு மாற்று வழி இல்லாத நிலையில் செலவுகளை ஈடு செய்யக்கூடிய விலையையாவது நிர்ணயிக்க வேண்டியேற்படும் என மேலும் கூறினார்
.

ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம்



 இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.05 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 122.63 புள்ளிகள் அதிகரித்து 17568.38 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 19.35 புள்ளிகள் அதிகரித்து 5300.55 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று பெரும் சரிவைச் சந்தித்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், உள்நாட்டில் பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கும் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. மேலும், ஐரோப்பிய பிரச்னைகளுக்கு முழுமையாக தீர்வு காணப்படாததால், இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் பங்கு வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது.

சென்செக்ஸ்' 478 புள்ளிகள் வீழ்ச்சி



மும்பை நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று பெரும் சரிவைச் சந்தித்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், உள்நாட்டில் பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கும் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. மேலும், ஐரோப்பிய பிரச்னைகளுக்கு முழுமையாக தீர்வு காணப்படாததால், இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் பங்கு வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது.
இந்நிலையில், சர்வதேச நிலவரங்கள், உத்தரபிரதேச மாநில தேர்தல் போன்றவற்றால், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கம் கண்டது. இது தவிர, லாப நோக்கம் கருதி அதிக எண்ணிக்கையில், பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் விலை மிகவும் குறைந்து போனது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், நுகர் பொருள் துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் ஓரளவிற்கு தேவை இருந்தது. அதேசமயம், மோட்டார் வாகனம், ரியல் எஸ்டேட், வங்கி, பொறியியல், உலோகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 477.82 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 17,445.75 புள்ளிகளில் நிலைபெற்றது. 
வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,975.19 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,381.64 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஐ.டி.சி., மற்றும் சன்பார்மா ஆகிய இரு நிறுவனப் பங்குகளை தவிர, ஏனைய 28 நிறுவனப் பங்குகளின் விலையும் சரிவடைந்திருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 148.10 புள்ளிகள் சரிவடைந்து, 5,281.20 புள்ளிகளில் நிலைகொண்டது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,449.80 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,268.15 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Monday, February 27, 2012

478 புள்ளிகள் சரிவில் முடிந்தது சென்செக்ஸ்



 இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று இறக்கத்துடன் முடிந்தது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 477.82 புள்ளிகள் குறைந்து 17445.75 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 148.10 புள்ளிகள் குறைந்து 5281.20 புள்ளிகளோடு காணப் பட்டது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ், எல் அண்ட் டி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ, இன்போசிஸ், ஹச்டீஎஃப்சி, டிசிஎஸ் ஆகியவற்றின் பங்குகள் சரிவில் முடிந்தன.

Sunday, February 26, 2012

ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் முதலீடு செய்ய சந்தர்ப்பம்




சமாதானம் மலர்ந்துள்ள இலங்கையில் முதலீடு செய்வதற்கான சந்தர்ப்பம் ஜப்பான்
 முதலீட்டாளர்களுக்கு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.


இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பானின் விசேட பௌத்த தூதுக் குழுவினருடன் இன்று முற்பகல் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.


இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் பொருளாதார மலர்ச்சியால் வலுவான எதிர்கால பயணத்திற்குள் பிரவேசித்துள்ள இலங்கையை, விரைவில் அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தமது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 
வருடங்கள் பூர்த்தியாகும் இத்தருணத்தில் நீண்டகால நட்பு தொடர்பாகவும் ஜனாதிபதி நினைவுபடுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தாம் நீண்டகாலமாக இலங்கைக்கு வருகைதர எதிர்பார்த்திருந்ததாக ஜப்பானின் விசேட பெளத்த தூதுக்குழுவிற்கு தலைமைதாங்கும் காங்கோஜி விஹாரையின் விஹாராதிபதி சுஜிமுரா தய்சென் தேரர் கூறியுள்ளார்.


இந்த சந்திப்பை அடுத்து அலரி மாளிகை வளாகத்தில் நடப்பட்டுள்ள ஜய ஸ்ரீ மாபோதி முன்பாக தேரர்கள் ஜனாதிபதிக்கும் இலங்கை வாழ் மக்களுக்கும் ஆசி வழங்கினர்.

அதிக ஏற்ற, இறக்கத்தில் நாட்டின் பங்கு வர்த்தகம்



மஹா சிவராத்திரியை முன்னிட்டு, சென்ற திங்களன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறையாக இருந்தது. ஆக, நான்கு நாட்கள் நடைபெற்ற பங்குவியாபாரத்தில், செவ்வாய் தவிர்த்த, ஏனைய மூன்று வர்த்தக தினங்களில், பங்கு வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்ததுடன், ஒட்டுமொத்த அளவில், சுணக்கம் கண்டது.
நடப்பு ஆண்டில், ஜனவரி முதல் இதுவரையிலுமாக, பங்கு வர்த்தகம் ஏறுமுகமாகத்தான் இருந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது.
பொதுவாக, தங்கம், வைரம், வீடு, மனை, கட்டில், பீரோ போன்றவற்றின் விலை குறையும்போது தான், அவற்றை வாங்குவர். ஆனால், பங்கு வர்த்தகத்தில் மட்டும்தான், பங்குகளின் விலை உயரும் போது, அதை வாங்குவதில் ஆர்வம் காட்டுவர். கடந்த இரண்டு மாதங்களாக சந்தையில் இதுதான் நடக்கிறது.
சந்தை இறக்கத்திற்கு காரணம் : சமீப காலமாக, ஈரான் பிரச்னையால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது, பங்குச் சந்தையில் ஒரு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலை கூடுவதால், இதர பொருட்களின் விலையும் கூடும். 
இதனால், நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கும். அது பங்குச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கச்சா எண்ணெய் விலை உயர்வால், உள்நாட்டில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர வாய்ப்புள்ளது.
வெள்ளியன்று, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 155 புள்ளிகள் சரிவடைந்து, 17,923 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 54 புள்ளிகள் குறைந்து, 5,429 புள்ளிகளிலும் நிறைவடைந்தன. நடப்பு வாரத்தில் மட்டும், "சென்செக்ஸ்' 366 புள்ளிகள் சரிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வட்டி விகிதம் : கடன் மற்றும் டிபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்கள் இன்னும் குறையவில்லை. இது, ஒரு பெரிய குறைதான். பல வங்கிகளும், தனியார் நிறுவனங்களும், டிபாசிட்டிற்கு, 10 சதவீதத்திற்கும் அதிகமாக வட்டி வழங்கி வருகின்றன. இது, சந்தையில் பணப்புழக்கம், குறைவாக உள்ளதை எடுத்துக்காட்டுகிறது. ரிசர்வ் வங்கி, வரும் மார்ச் மாதத்தில், வங்கிகளுக்கான வட்டி விகிதங்கள் அல்லது ரொக்க இருப்பு விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளது. எனவே, டிபாசிட் செய்ய விரும்புவர்களுக்கு, தற்போதைய சூழ்நிலை சாதகமானதாகும். ஏனெனில், டிபாசிட்டிற்கு 11 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது.
புதிய வெளியீடுகள் : முன்பேர வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும், மல்டி கமாடிட்டி எக்சேஞ்ச் (எம்.சி.எக்ஸ்.) நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டிற்கு, முதலீட்டாளர்களிடமிருந்து அமோக ஆதரவு கிடைத்துள்ளது. இதன் பங்குகள் வேண்டி, 54 மடங்கிற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் வந்துள்ளன. 
குறிப்பாக, சிறிய முதலீட்டாளர்களிடமிருந்து, 24 மடங்கிற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 2 லட்சம் ரூபாய்க்கு பங்குகள் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு, குறைந்த அளவிற்கே பங்குகள் கிடைக்கும். ஒரு பங்கில், 500 ரூபாய் லாபம் கிடைப்பதாகக் கொண்டால், 3,000 ரூபாய் வரையில் தான் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
எம்.சி.எக்ஸ்.சின் பங்கு வெளியீட்டைத் தொடர்ந்து, மேலும் பல நிறுவனங்கள், பங்கு வெளியீட்டில் களம் இறங்கக்கூடும். நல்ல வெளியீடுகளாகப் பார்த்து முதலீடு செய்ய வேண்டும். இல்லாவிடில், இழப்பு ஏற்படும்.
நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள, ஓ.என்.ஜி.சி. நிறுவனமும், பங்கு வெளியீட்டில் களமிறங்க வாய்ப்புள்ளது. தற்போது, பங்குச் சந்தை நன்கு உள்ளது. இதை சாதகமாகப் பயன்படுத்தி, தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி, பொதுத் துறை நிறுவனங்களும் புதிய பங்கு வெளியீட்டை மேற்கொள்ளக் கூடும்.
சிட்டி பேங்க் : சிட்டி பேங்க், எச்.டீ.எப்.சி., நிறுவனத்தில் கொண்டிருந்த, 10.92 சதவீத பங்குகளை விற்பனை செய்ததன் மூலம், 7,000 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. ஆறு வருடங்களுக்கு முன்பு, 3,000 கோடி ரூபாய் அளவிற்கு மேற்கொண்ட முதலீடு, இன்று 10,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை : தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதன் விலை உயர்ந்துள்ளது. இதற்கு, சீன நாடு அதிக அளவில் தங்கம் வாங்குவது தான் காரணம். இதுநாள் வரை, உலக அளவில் தங்கம் வாங்குவதில் இந்தியா தான் முதலிடத்தில் இருந்தது. ஆனால், சென்ற காலாண்டில், தங்கம் வாங்குவதில், சீனா, இந்தியாவை விஞ்சியுள்ளது. 
மேலும், அமெரிக்கா அதன் பொருளாதார மேம்பாட்டிற்காக, புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால், தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
வரும் வாரம் எப்படி இருக்கும்? : எம்.சி.எக்ஸ். நிறுவனத்தின் புதிய வெளியீட்டில் பங்குகள் வேண்டி 54 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான தொகை முடக்கப்பட்டுள்ளது. மிக அதிக அளவிலான தொகை ஒரு நிறுவனத்தின் பங்கு வெளியீட்டில் குவிக்கப்பட்டுள்ளது. இதன் பங்குகள், பங்குச் சந்தையில், பட்டியலிடப்படும்போது, எந்த அளவிற்கு இருக்கும் என்று தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலாக உள்ளனர். வரும் வாரத்தில், பங்கு வர்த்தகத்தில், அதிக ஏற்றம் இருக்க வாய்ப்பில்லை என்றாலும், அதிக அளவில் இறக்கம் இருக்காது எனலாம்.
- சேதுராமன் சாத்தப்பன் -

Saturday, February 25, 2012

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் மீண்டும் 18,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிவு



மும்பை நாட்டின் பங்கு வியாபாரம் தொடர்ந்து, மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை யன்றும் சரிவுடன் முடிவடைந்தது. அமெரிக்காவில், பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படத் துவங்கியுள்ளது என்ற செய்தியால், ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. ஆனால், லாப நோக்கம் கருதி அதிக எண்ணிக்கையில் பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், இந்திய பங்குச் சந்தைகளில் பல துறைகளைச்சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்துபோனது.மேலும், ஈரான் பிரச்னையால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இதனால், பணவீக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில், 80 சதவீதம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் விலை உயர்வு இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நிலைப்பாட்டால், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாக இருந்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில்,பொறியியல், தகவல் தொழில்நுட்பம், மின்சாரம் உள்ளிட்டத் துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது. அதேசமயம், ஸ்@டட் @பங்க் ஆப் இந்தியா, டீ.எல்.எப்., எச்.டீ.எப்.சி., மற்றும் எல் அண்டு டி ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை மிகவும்சரிவடைந்து காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 18,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்தது. அதாவது, 154.93 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 17,923.57 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,198.15 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,848.93 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 16 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 14 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 54 புள்ளிகள் சரிவடைந்து, 5,429.30 புள்ளிகளில் நிலைபெற்றது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,521.40 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,405.90 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Friday, February 24, 2012

சரிவுடன் முடிந்தது வர்த்தகம்



மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று சரிவுடன் முடிந்தது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 154.93 புள்ளிகள் குறைந்து 17923.57 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 54.00 புள்ளிகள் குறைந்து 5429.30 புள்ளிகளோடு காணப் பட்டது. வங்கிகள், கபிடல் குட்ஸ், எண்ணெய் மற்றும் காஸ் ஆகியவற்றின் பங்குகள் சரிவில் முடிந்தன. 2012ல் முதல் முறையாக இந்த வாரம் பங்குச்சந்தை ‌மோசமான நிலையில் முடிந்துள்ளது. கடந்த 6 வாரங்களில் இல்லாத அளவிற்கு பங்குச்சந்தை சரிந்துள்ளது.

ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது வர்த்தகம்



மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.09 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 0.51 புள்ளிகள் அதிகரித்து 18079.01 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 4.15 புள்ளிகள் குறைந்து 5479.15 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்று மந்தமாக இருந்தது. இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் பங்கு வியாபாரம் நன்கு இல்லாததால், இந்திய பங்குச் சந்தைகளிலும், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இந்நிலையில், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம், ஓரளவிற்கு சூடுபிடித்திருந்தது. ஆனால், இது இந்தியப் பங்குச் சந்தைகளில் எவ்வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், உலோகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்திருந்தது. இருப்பினும், எரிசக்தி, மின்சாரம், நுகர் பொருட்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது.

சென்செக்ஸ்' 67 புள்ளிகள் சரிவு



மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்று மந்தமாக இருந்தது. இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் பங்கு வியாபாரம் நன்கு இல்லாததால், இந்திய பங்குச் சந்தைகளிலும், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இந்நிலையில், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம், ஓரளவிற்கு சூடுபிடித்திருந்தது. ஆனால், இது இந்தியப் பங்குச் சந்தைகளில் எவ்வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், உலோகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்திருந்தது. இருப்பினும், எரிசக்தி, மின்சாரம், நுகர் பொருட்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 66.75 புள்ளிகள் சரிவடைந்து, 18,078.50 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,249.53 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,005.28 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 12 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 12 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 22.05 புள்ளிகள் குறைந்து, 5,483.30 புள்ளிகளில் நிலைகொண்டது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,537.40 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,460.80 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Thursday, February 23, 2012

சரிவுடன் முடிந்தது வர்த்தகம்


மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று சரிவுடன் முடிந்தது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 66.75 புள்ளிகள் குறைந்து 18078.50 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 22.05 புள்ளிகள் குறைந்து 5483.30 புள்ளிகளோடு காணப் பட்டது. இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி, எல் அண்ட் டி, பார்தி ஆகியவற்றின் பங்குகள் ஏற்றத்தில் முடிந்தன.

"சென்செக்ஸ்' 283 புள்ளிகள் வீழ்ச்சி


மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், புதன்கிழமையன்று மீண்டும் சுணக்கம் கண்டது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் பங்கு வியாபாரம் மந்தமாகவே இருந்தது. இந்நிலையில் பல முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்ததால் பல துறைகளைச் சேர்ந்த நிறுவன பங்குகளின் விலை குறைந்து போனது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாகவும், வரும் நிதியாண்டில், 7.5-8 சதவீதமாகவும் இருக்கும் என பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தெரிவித்தது. இதையடுத்து, மதியத்திற்கு பிறகு வர்த்தகம் அதிக சரிவிலிருந்து, சற்று முன்னேற்றம் கண்டது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், உலோகம், ரியல் எஸ்டேட், வங்கி உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 283.36 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 18,145.25 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,523.78 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,095.81 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 24 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 6 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையிலும் வர்த்தகம் மந்தமாகவே இருந்து. இப்பங்குச்சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 101.80 புள்ளிகள்குறைந்து, 5,505.35 புள்ளிகளில் நிலைபெற்றது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,629.95 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,491.35 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Wednesday, February 22, 2012

283 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது சென்செக்ஸ்


மும்பை இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் முடிந்தது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 283.36 புள்ளிகள் குறைந்து 18145.25 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 101.80 புள்ளிகள் குறைந்து 5505.35 புள்ளிகளோடு காணப் பட்டது. டாடா ஸ்டீல், ஜேன்டல் ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டர்ஸ்டீஸ், எல் அண்ட் டி, பார்தி ஏர்டெல் ஆகியவற்றின் பங்குகள் சரிவில் முடிந்தன. 
Share  
Bookmark and Share

"சென்செக்ஸ்''139 புள்ளிகள் அதிகரிப்பு "சென்செக்ஸ்' 139 புள்ளிகள் அதிகரிப்பு "சென்செக்ஸ்' 139 புள்ளிகள் அதிகரிப்பு



மும்பை நாட்டின் பங்கு வியாபாரம், செவ்வாய்கிழமையன்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. கிரீஸ் நாட்டு கடன் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 17 ஆயிரம் கோடி டாலர் அளவிற்கு நிவாரண உதவி வழங்க ஐரோப்பிய நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
இந்த செய்தி, ஐரோப்பிய சந்தைகளில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது.இருப்பினும், சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பு அதிகரித்ததையடுத்து, நாட்டின் பங்கு வர்த்தகம் சூடுபிடித்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், நுகர்வோர் சாதனங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சாரம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், ஸ்டெர்லைட், டாட்டா பவர், விப்ரோ மற்றும் பவர் கிரிட் உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 139.26 புள்ளிகள் அதிகரித்து, 18,428.61 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,470.86 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,293.80 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 20 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும்,10 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 42.85 புள்ளிகள் உயர்ந்து, 5,607.15 புள்ளிகளில் நிலைகொண்டது. இது, கடந்த ஏழு மாதங்களுக்குப் பிறகான உயர்வாகும். இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,621.50 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,561.75 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Tuesday, February 21, 2012

ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது வர்த்தகம்


மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது.வார வர்த்தகத்தின் முதல் நாளான நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு வர்த்தகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த வாரம் வெள்ளியன்று ஏற்றத்துடன் முடிந்திருந்த வர்த்தகம் இன்று எற்ற இறக்கத்துடன் தெடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.05 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 24.40 புள்ளிகள் அதிகரித்து 18313.75 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 2.40 புள்ளிகள் குறைந்து 5561.90 புள்ளிகளோடு காணப் பட்டது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு...பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை


மும்பை: மகா சிவராத்திரியை முன்னிட்டு மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளுக்கு திங்கள்கிழமையன்று விடுமுறையாக இருந்தது. இதனால், மேற்கண்ட இரண்டு பங்குச் சந்தைகளிலும் நேற்று பங்கு வியாபாரம் நடைபெறவில்லை. மும்பை தங்கம், வெள்ளி மார்க்கெட்டுகளும் விடுமுறை அறிவித்திருந்தன.கடந்த வெள்ளியன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 135.36 புள்ளிகள் அதிகரித்து 18,289.35 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 42.35 புள்ளிகள் உயர்ந்து 5,564.30 புள்ளிகளிலும் நிலைபெற்றன.நேற்று உலகின் இதர பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கமாக இருந்தது. இதனால், இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கமாக இருக்கக் கூடும் என பங்குச் சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

முன்பேர சந்தைகளில் ரூ.151 லட்சம் கோடிக்கு வர்த்தகம்


புதுடில்லி: நாட்டில் உள்ள, 21 முன்பேர சந்தைகளில், நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம், 
61 சதவீதம் வளர்ச்சிகண்டு, 151 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டு, இதே காலத்தில், 94.25 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, முன்பேர சந்தைகளின் கட்டுப்பாட்டு அமைப்பான, பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.,) தெரிவித்துள்ளது.உள்நாட்டில், தேசிய அளவில், ஐந்து முன்பேர சந்தைகளும், மண்டல அளவில், 16 சந்தைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தைகள் அனைத்திலுமாக, பல்வேறு விளைபொருள்கள் மீது, முன்பேர வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது.குறிப்பாக, தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், கொத்தவரை, கொண்டைக் கடலை மற்றும் சோயா எண்ணெய் ஆகியவற்றின் மீது மிக அதிகளவில் வர்த்தகம் நடைபெறுகிறது. கணக்கீட்டு காலத்தில், தங்கம், வெள்ளி ஆகிய மதிப்புமிகு உலோகங்கள் மீதான வர்த்தகம், இரண்டு மடங்கு அதிகரித்து, அதாவது, 42.91 லட்சம் கோடியிலிருந்து, 
87.58 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.கொத்தவரை மீதான வர்த்தகம், 52 சதவீதம் வளர்ச்சிகண்டு, 11.14 லட்சம் கோடியிலிருந்து, 16.95 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இவைதவிர, கச்சா எண்ணெய் மீதான வர்த்தகம், 32 சதவீதம் அதிகரித்து, 18.38 லட்சம் கோடியிலிருந்து, 24.23 லட்சம் கோடி ரூபாயாகவும், தாமிரம் உள்ளிட்ட உலோகங்கள் மீதான வர்த்தகம், 6 சதவீதம் வளர்ச்சிகண்டு, 21.82 லட்சம் கோடியிலிருந்து, 23.11 லட்சம் கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
சென்ற ஜனவரி மாதத்தில், எம்.சி.எக்ஸ். முன்பேர வர்த்தக சந்தையில், 12.21 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து, என்.சி.டி.இ.எக்ஸ் (1.72 லட்சம் கோடி ரூபாய்), என்.எம்.சி.இ.(34 ஆயிரத்து 643 கோடி ரூபாய்), ஐ.சி.இ.எக்ஸ்.(20 ஆயிரத்து 687 கோடி ரூபாய்) மற்றும் ஏ.சி.இ. (13 ஆயிரத்து 106 கோடி ரூபாய்) ஆகிய சந்தைகளிலும் அதிகளவில் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், முன்பேர வர்த்தக சந்தையில் முன்னிலையில் உள்ள, எம்.சி.எக்ஸ் நிறுவனம், அதன் விரிவாக்க நடவடிக்கைகளுக்குத் தேவையான பகுதி நிதியை திரட்டி கொள்வதற்காக, இம்மாத இறுதியில் பொது மக்களுக்கு பங்குகளை வெளியிட்டு, மூலதனச் சந்தையில் களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பரில் ரூ.5,600 கோடிக்கு பங்கு வெளியீடு


மும்பை: சென்ற டிசம்பரில், புதிய மற்றும் உரிமை பங்கு வெளியீடுகள் வாயிலாக, நிறுவனங்கள் 5,600 கோடி ரூபாயை திரட்டியுள்ளன. இது, நவம்பரில் திரட்டப்பட்ட, 1,601 கோடி ரூபாயை விட, ஐந்து மடங்கிற்கும் மேல் அதிகம் என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி' வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த நவம்பரை விட, டிசம்பரில் பங்கு வர்த்தகம் நன்கு இல்லாததால், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்' 6.6 சதவீதம் சரிவடைந்திருந்தது. இந்நிலையிலும், டிசம்பரில், பங்கு வெளியீடுகள் வாயிலாக, 5,600 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், 51 பங்கு வெளியீடுகள் வாயிலாக, நிறுவனங்கள், 23 ஆயிரத்து 3 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டன. கடந்த 2010-11ம் நிதியாண்டின் இதே காலத்தில், 66 பங்கு வெளியீடுகள் மூலம் நிறுவனங்கள், திரட்டிய தொகை, 50 ஆயிரத்து 480 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது.
சென்ற டிசம்பரில், தகுதி வாய்ந்த நிதி நிறுவனத்திற்கு, பங்கு ஒதுக்கீடு செய்து, ஒரு நிறுவனம் மட்டும், 68 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டது. ஆனால், நவம்பரில், இதுபோன்ற ஒதுக்கீடு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதே மாதத்தில், முன்னுரிமை பங்கு ஒதுக்கீட்டின் மூலம், 19 நிறுவனங்கள், 517 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டன. நவம்பரில், 21 முன்னுரிமை பங்கு வெளியீட்டின் மூலம், 169 கோடி ரூபாய் திரட்டிக் கொள்ளப்பட்டது என, "செபி' அமைப்பின் புள்ளி விவரத்தில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Saturday, February 18, 2012

தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துவரும் கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு பரிவர்த்தனை.


தொடர்ச்சியாக ஆறாவது நாளாகவும் கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு பரிவர்த்தனை இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.

இதற்கமைய மொத்த விலைச்சுட்டெண்ணின் பெறுமதி 1.91 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், மிலங்கா விலைச்சுட்டெண்ணில் 1.84 வீத வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

பங்கு சந்தையின் இன்றைய பரிவர்த்தனையின் நிறைவில் மொத்த விலைச் சுட்டெண் முன்னைய நாளுடன் ஒப்பிடுகையில் 106.48 அலகுகளால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் பங்கு விலைச் சுட்டெண் 5454.95 ஆகப் பதிவானது.

இது இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த விலைச்சுட்டெண்ணில் பதிவான மிக குறைந்த பெறுதியாகவும் கருதப்படுகின்றது.

மிலங்கா விலைச்சுட்டெண்ணும் இன்று 84.20 பூஜ்ஜியம் அலகுகளால் வீழ்ச்சியடைந்ததுடன் அதன் பெறுமதி 4721.79 அலகுகளாகப் பதிவானது.

கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியை காட்டுகின்ற கொழும்பு பங்குச் சந்தையின் விலைச்சுட்டெண்ணில் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 10 வீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த வருடம் பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகளில் கொழும்பு பங்குச் சந்தை உலகின் முதலிடத்துக்கு உயர்ந்தது.

இதன்போது மொத்த விலைச்சுட்டெண்ணின் பெறுமதி 7816 அலகுகளாகவும்,மிலங்கா விலைச்சுட்டெண்ணின் பெறுமதி 7327 அலகுகளாகவும் வளர்ச்சியடைந்திருந்தன.

எனினும் கடந்த வருட இறுதியில் மொத்த விலைச்சுட்டெண் 22 வீதத்தாலும் மிலங்கா விலைச்சுட்டெண் 28 வீதத்தாலும் வீழ்ச்சியடைந்தன.