Friday, February 24, 2012

சரிவுடன் முடிந்தது வர்த்தகம்



மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று சரிவுடன் முடிந்தது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 154.93 புள்ளிகள் குறைந்து 17923.57 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 54.00 புள்ளிகள் குறைந்து 5429.30 புள்ளிகளோடு காணப் பட்டது. வங்கிகள், கபிடல் குட்ஸ், எண்ணெய் மற்றும் காஸ் ஆகியவற்றின் பங்குகள் சரிவில் முடிந்தன. 2012ல் முதல் முறையாக இந்த வாரம் பங்குச்சந்தை ‌மோசமான நிலையில் முடிந்துள்ளது. கடந்த 6 வாரங்களில் இல்லாத அளவிற்கு பங்குச்சந்தை சரிந்துள்ளது.