Saturday, March 3, 2012

ஏற்ற இறக்கத்துடன் முடிந்தது இன்றைய சிறப்பு வர்த்தகம்



 இந்திய பங்குச்சந்தையின் இன்றைய சிறப்பு வர்த்தகம் ஏற்ற இறக்கத்துடன் முடிந்தது. வர்த்தக நேரம் முடிவின் ‌போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 14.52 புள்ளிகள் குறைந்து 17622.28 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 0.05 புள்ளிகள் அதிகரித்து 5359.40 புள்ளிகளோடு காணப் பட்டது. இன்போசிஸ், ஐடிசி, ஐசிஐசிஐ, ஹச்டிஎஃப்சி மற்றும் டிசிஎஸ் ஆகியவற்றின் பங்குகள் ஏற்றத்தில் முடிந்தன.

திருகோணமலையில் ஆறு நெற்களஞ்சியசாலைகள்



திருகோணமலை மாவட்டத்தில் ஆறு நெற்களஞ்சியசாலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

19.9 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த களஞ்சியசாலைகளில், கந்தளாய் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில் இருந்து கொள்வனவு செய்யும் நெல்லை களஞ்சியப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கென நிர்மாணிக்கப்பட்ட 80 வீடுகளைக் கொண்ட நெல்சன்புர வீட்டுத் திட்டம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்ற

இன்றைய சிறப்பு வர்த்தகம் ஏற்றத்தில் தொடங்கியது



 இந்திய பங்குச்சந்தை வாரத்தின் ஐந்து நாட்கள் மட்டும் நடைபெறுவது வழக்கம். ஆனால் இன்று சனிக்கிழமை சிறப்பு வர்த்தகம் நடைபெறுகிறது. இன்று வர்த்தக நேர துவங்கிய 10 நிமிடங்களிலேயே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 34.60 புள்ளிகள் அதிகரித்து 17671 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 4.55 புள்ளிகள் அதிகரித்து 5363.90 புள்ளிகளோடு காணப் பட்டது. முதல் 10 நிமிடங்களிலேயே பங்கு வர்த்தகம் ஏற்றத்தில் காணப்பட்டது பங்கு முதலீட்டாளர்களிடையே உச்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

"சென்செக்ஸ்" 53 புள்ளிகள் அதிகரிப்பு



மும்பை நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று ஏற்றத்துடன் முடிவடைந்தது.குறிப்பாக, அமெரிக்காவில் வேலை வாய்ப்பு பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்ற செய்தியால், அந்நாட்டிலும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. ஐரோப்பிய நாடுகளின், நிதி நெருக்கடிக்குத் தீர்வுகாணும் வகையில், இரண்டாம் கட்ட திட்டத்திற்கு, இந்நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் வழங்கியதையடுத்து, ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் விறுவிறுப்படைந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், வங்கி, ஆரோக்ய பராமரிப்பு, பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 52.83 புள்ளிகள் அதிகரித்து, 17,636.80 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,731.88 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,504.38 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 16 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 14 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 19.60 புள்ளிகள் உயர்ந்து, 5,359.35 புள்ளிகளில் நிலைகொண்டது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,392.55 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,315.05 புள்ளிகள் வரையிலும் சென்றது.