Friday, February 24, 2012

சரிவுடன் முடிந்தது வர்த்தகம்



மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று சரிவுடன் முடிந்தது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 154.93 புள்ளிகள் குறைந்து 17923.57 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 54.00 புள்ளிகள் குறைந்து 5429.30 புள்ளிகளோடு காணப் பட்டது. வங்கிகள், கபிடல் குட்ஸ், எண்ணெய் மற்றும் காஸ் ஆகியவற்றின் பங்குகள் சரிவில் முடிந்தன. 2012ல் முதல் முறையாக இந்த வாரம் பங்குச்சந்தை ‌மோசமான நிலையில் முடிந்துள்ளது. கடந்த 6 வாரங்களில் இல்லாத அளவிற்கு பங்குச்சந்தை சரிந்துள்ளது.

ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது வர்த்தகம்



மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.09 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 0.51 புள்ளிகள் அதிகரித்து 18079.01 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 4.15 புள்ளிகள் குறைந்து 5479.15 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்று மந்தமாக இருந்தது. இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் பங்கு வியாபாரம் நன்கு இல்லாததால், இந்திய பங்குச் சந்தைகளிலும், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இந்நிலையில், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம், ஓரளவிற்கு சூடுபிடித்திருந்தது. ஆனால், இது இந்தியப் பங்குச் சந்தைகளில் எவ்வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், உலோகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்திருந்தது. இருப்பினும், எரிசக்தி, மின்சாரம், நுகர் பொருட்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது.

சென்செக்ஸ்' 67 புள்ளிகள் சரிவு



மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்று மந்தமாக இருந்தது. இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் பங்கு வியாபாரம் நன்கு இல்லாததால், இந்திய பங்குச் சந்தைகளிலும், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இந்நிலையில், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம், ஓரளவிற்கு சூடுபிடித்திருந்தது. ஆனால், இது இந்தியப் பங்குச் சந்தைகளில் எவ்வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், உலோகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்திருந்தது. இருப்பினும், எரிசக்தி, மின்சாரம், நுகர் பொருட்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 66.75 புள்ளிகள் சரிவடைந்து, 18,078.50 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,249.53 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,005.28 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 12 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 12 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 22.05 புள்ளிகள் குறைந்து, 5,483.30 புள்ளிகளில் நிலைகொண்டது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,537.40 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,460.80 புள்ளிகள் வரையிலும் சென்றது.