Tuesday, February 21, 2012

ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது வர்த்தகம்


மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது.வார வர்த்தகத்தின் முதல் நாளான நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு வர்த்தகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த வாரம் வெள்ளியன்று ஏற்றத்துடன் முடிந்திருந்த வர்த்தகம் இன்று எற்ற இறக்கத்துடன் தெடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.05 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 24.40 புள்ளிகள் அதிகரித்து 18313.75 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 2.40 புள்ளிகள் குறைந்து 5561.90 புள்ளிகளோடு காணப் பட்டது.