Tuesday, February 21, 2012

மகா சிவராத்திரியை முன்னிட்டு...பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை


மும்பை: மகா சிவராத்திரியை முன்னிட்டு மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளுக்கு திங்கள்கிழமையன்று விடுமுறையாக இருந்தது. இதனால், மேற்கண்ட இரண்டு பங்குச் சந்தைகளிலும் நேற்று பங்கு வியாபாரம் நடைபெறவில்லை. மும்பை தங்கம், வெள்ளி மார்க்கெட்டுகளும் விடுமுறை அறிவித்திருந்தன.கடந்த வெள்ளியன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 135.36 புள்ளிகள் அதிகரித்து 18,289.35 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 42.35 புள்ளிகள் உயர்ந்து 5,564.30 புள்ளிகளிலும் நிலைபெற்றன.நேற்று உலகின் இதர பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கமாக இருந்தது. இதனால், இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கமாக இருக்கக் கூடும் என பங்குச் சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.