Friday, March 2, 2012

ஏற்றத்துடன் முடிநதது வர்த்தகம்



 இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் ஏற்ற இறக்கங்கள் அதிகளவில் காணப்பட்டன. வர்த்தக முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 32.40 புள்ளிகள் அதிகரித்து 17616.37 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 14.35 புள்ளிகள் அதிகரித்து 5354.10 புள்ளிகளோடு காணப் பட்டது. ரிலையன்ஸ் இண்டர்டீஸ், லார்சன், ஐசிஐசிஐ, எஸ்பிஐ, ஹச்டிஎஃப்சி, மாருதி சுசூகி, பார்தி ஏர்டெல், என்டிபிசி, டாடா ஸ்டீல் மற்றும் விப்ரோ ஆகியவற்றின் பங்குகள் ஏற்றத்தில் முடிந்தன. 

ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம்



 இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.15 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 43.61 புள்ளிகள் அதிகரித்து 17627.58 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 8.45 புள்ளிகள் அதிகரித்து 5348.20 புள்ளிகளோடு காணப் பட்டது. ஏற்றத்தில் காணப்பட்ட வர்த்தகம் சிறிது நேரத்தி‌லேயே சரிந்து காணப்பட்டது. 9.29 மணியளவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 44.53 புள்ளிகள் குறைந்து 17535.03 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 14.60 புள்ளிகள் குறைந்து 5325.15 

மசகு எண்ணெய்க்கான கொடுப்பனவுகளைத் தங்கமாகப் பெற்றுக்கொள்ள ஈரான் இணக்கம்



மசகு எண்ணெய்கான கொடுப்பனவுகளை தங்கமாகப் பெற்றுக்கொள்ள ஈரான் இணக்கம் தெரிவித்துள்ளது.

அணுத்திட்ட சர்ச்சை காரணமாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஈரான் வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு எதிராகத் தடைகளை விதித்துள்ளன.

இதன்காரணமாக கொள்வனவு செய்யும் மசகு எண்ணெய்கான கொடுப்பனவுகளை ஈரான் வங்கிகளுக்கு செலுத்துவதில் வாடிக்கையாளர்கள் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.

தடைகளின் ஒரு கட்டமாக ஈரான் எண்ணெய் கொள்வனவை நிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதன் பிரகாரம் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதியில் இருந்து ஈரானிடம் இருந்து மசகு எண்ணெய் கொள்வனவை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நிறுத்தவுள்ளன.

ஈரானின் 20 வீதமான மசகு எண்ணெய் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

எனினும், ஈரானின் மசகு எண்ணெய்யை பாரியளவில் கொள்வனவு செய்யும் சீனா, மற்றும் இந்தியா போன்ற நாடுகள் தாம் தொடர்ந்தும் எண்ணெய் இறக்குமதி செய்யவுள்ளதாக அறிவித்துள்ள

"சென்செக்ஸ்" 169 புள்ளிகள் வீழ்ச்சி



மும்பை நாட்டின் பங்கு வியாபாரம், வியாழக்கிழமை அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. உலகின் ஒரு சில பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கமாக இருந்தது. இதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், விமான சேவை, வங்கி, பொறியியல் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், மோட்டார் வாகனம், உரம் உள்ளிட்ட ஒரு சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 168.71 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 17,583.97 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,717.53 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,463.27 புள்ளிகள் வரையிலும் சென்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 45.45 புள்ளிகள் குறைந்து, 5,339.75 புள்ளிகளில் நிலைபெற்றது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,372.45 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,297.50 புள்ளிகள் வரையிலும் சென்றது.