Friday, February 24, 2012

ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது வர்த்தகம்



மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.09 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 0.51 புள்ளிகள் அதிகரித்து 18079.01 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 4.15 புள்ளிகள் குறைந்து 5479.15 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்று மந்தமாக இருந்தது. இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் பங்கு வியாபாரம் நன்கு இல்லாததால், இந்திய பங்குச் சந்தைகளிலும், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இந்நிலையில், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம், ஓரளவிற்கு சூடுபிடித்திருந்தது. ஆனால், இது இந்தியப் பங்குச் சந்தைகளில் எவ்வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், உலோகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்திருந்தது. இருப்பினும், எரிசக்தி, மின்சாரம், நுகர் பொருட்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது.