Tuesday, February 28, 2012

ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம்



 இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.05 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 122.63 புள்ளிகள் அதிகரித்து 17568.38 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 19.35 புள்ளிகள் அதிகரித்து 5300.55 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று பெரும் சரிவைச் சந்தித்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், உள்நாட்டில் பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கும் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. மேலும், ஐரோப்பிய பிரச்னைகளுக்கு முழுமையாக தீர்வு காணப்படாததால், இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் பங்கு வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது.