Wednesday, February 29, 2012

ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம்



 இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. சர்வதேச சந்தையில் ஏற்றப்பட்ட ஏற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தையில் ஏற்றம் துவங்கியுள்ளது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 268.95 புள்ளிகள் அதிகரித்து 18000.07 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 81.25 புள்ளிகள் அதிகரித்து 5456.75 புள்ளிகளோடு காணப் பட்டது. இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மீண்டும் 18000 புள்ளிகளை எட்டியுள்ளது. இது பங்கு முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 16 காசுகள் உயர்ந்து 48.91 ஆக இருந்தது.