Wednesday, February 29, 2012

உலக சந்தையில் எண்ணெய்யின் விலை பாரியளவில் அதிகரிப்பு



உலக சந்தையில் எண்ணெய்யின் விலை கடந்த ஜுலை மாதத்தின் பின்னர் பாரியளவில் அதிகரித்துள்ளதாக பொருளாதாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ஈரானின் அணுத்திட்ட சர்ச்சைகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

உலகின் ஐந்தாவது எண்ணெய் உற்பத்தி நாடாக ஈரான் விளங்குகின்றது.

இந்த நிலையில் ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை சில நாடுகள் நிறுத்தியுள்ளதுடன், பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தப்போவதாகவும் ஈரான் தெரிவித்திருந்தது
.