Friday, March 2, 2012

ஏற்றத்துடன் முடிநதது வர்த்தகம்



 இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் ஏற்ற இறக்கங்கள் அதிகளவில் காணப்பட்டன. வர்த்தக முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 32.40 புள்ளிகள் அதிகரித்து 17616.37 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 14.35 புள்ளிகள் அதிகரித்து 5354.10 புள்ளிகளோடு காணப் பட்டது. ரிலையன்ஸ் இண்டர்டீஸ், லார்சன், ஐசிஐசிஐ, எஸ்பிஐ, ஹச்டிஎஃப்சி, மாருதி சுசூகி, பார்தி ஏர்டெல், என்டிபிசி, டாடா ஸ்டீல் மற்றும் விப்ரோ ஆகியவற்றின் பங்குகள் ஏற்றத்தில் முடிந்தன.