Saturday, March 3, 2012

இன்றைய சிறப்பு வர்த்தகம் ஏற்றத்தில் தொடங்கியது



 இந்திய பங்குச்சந்தை வாரத்தின் ஐந்து நாட்கள் மட்டும் நடைபெறுவது வழக்கம். ஆனால் இன்று சனிக்கிழமை சிறப்பு வர்த்தகம் நடைபெறுகிறது. இன்று வர்த்தக நேர துவங்கிய 10 நிமிடங்களிலேயே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 34.60 புள்ளிகள் அதிகரித்து 17671 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 4.55 புள்ளிகள் அதிகரித்து 5363.90 புள்ளிகளோடு காணப் பட்டது. முதல் 10 நிமிடங்களிலேயே பங்கு வர்த்தகம் ஏற்றத்தில் காணப்பட்டது பங்கு முதலீட்டாளர்களிடையே உச்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.