Friday, February 17, 2012

ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம்



மும்பை இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.04 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 168.13 புள்ளிகள் அதிகரித்து 18313.16 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 38.20 புள்ளிகள் அதிகரித்து 5560.15 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம் வியாழக்கிழமையன்று அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. கிரீஸ் நாட்டு கடன் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலான, இரண்டாவது திட்டத்திற்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் என்ற நிலைப்பாட்டால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் 1 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தது.இது தவிர, சீனாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு சென்ற ஜனவரி மாதத்திலும் சரிவடைந்துள்ளது என்ற செய்தியால், இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சுணக்கம் கண்டது.